இலங்கை மாணவர்களின் பரிதாப நிலை; நாளை என்னவாகுமோ!




கல்வியே எதிர்காலத்தை நிர்ணயிக்கும் எனும் நிலை மாறி தற்போது வாகனப் போக்குவரத்தும் எரிபொருட்களும் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் நிலை இலங்கையில் ஏற்பட்டுள்ளது.

நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரிதும் துன்பங்களை எதிர்நோக்கியுள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பலவற்றை பெறுவதற்காக நீண்டநேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கும் இலங்கை மக்கள் தள்ளப்பட்டுள்ளது.




அதிலும் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியால் பாடசாலை செல்லும் மாணவர்கள் உயிருக்ல்கு ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். அதுமட்டுமல்லாது மின்தடையால் மாணவர்கள் சீருடையுடன் எரிபொருளுக்காக காத்திருக்கும் அவலநிலையும் தோன்றியுள்ளது.


இந்நிலையில் நம் எதிகால சந்ததியின் நிலை என்னவாகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அதேவேளை நாட்டில் இடம்பெற்ற இனவழிப்புபோர்க்காலத்தில் கூட மக்கள் இவ்வாறான நெருக்கடிகளை சந்தித்ததில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.


 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.