இந்திய - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை நடைபெறுவதில் என்ன முட்டுக்கட்டை?

 இலங்கை இந்திய மீனவர்களிடையேயான பேச்சு வார்த்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இருநாட்டு மீனவர்கள் இடையே ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளது.

மீனவர் பேச்சுவார்த்தை உடனடியாக நடத்தி, இரு நாட்டு மீனவர்களும் நடுக்கடலில் சுமூகமான முறையில் மீன் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரு நாட்டு மீனவர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில், விரைவில் மீனவர் பேச்சுவார்த்தை நடைபெறும் என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் நுழைவதால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆவதுடன், மீனவர்கள் இடம்பெயர்ந்து மாற்று தொழில் தேடி செல்வதால் அடுத்த தலைமுறைக்கு மீன் தொழில் தெரியாமல் அழிந்து விடும் சூழ்நிலை இருப்பதாகவும் இலங்கை மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இரு நாட்டு மீனவர்களிடையே ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட இந்திய இலங்கை மீனவர்களிடம்., இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினர். அதில் கலந்து கொண்ட மீனவர்கள் தங்களது கருத்துக்களை முன் வைத்துள்ளனர்.



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.