பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை! நீங்கள் ஏமாற்றப்படலாம்

 பொலிஸார் போன்று வேடமணிந்து கொள்ளையடிக்கும் நபர்கள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

இவ்வாறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று வேடமணிந்து மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை அச்சுறுத்தி 90 கைத் தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகளை அபகரித்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கொழும்பு, வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவர்களை கைது  செய்துள்ளனர். 

பொலிஸாருக்கு கிடைத்த தகவல்

பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை! நீங்கள் ஏமாற்றப்படலாம் | A Warning Issued By The Police To The Public

கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர்கள் கொள்ளையிட்ட பொருட்களை பல இடங்களில் மக்களுக்கு விற்பனை செய்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். 

இந்த இரு சந்தேகநபர்களும், மோட்டார் சைக்கிளில் சென்று பல்வேறு நபர்களை சோதனையிட்டு கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட உடமைகளை திருடிச் செல்வதாக பொலிஸாருக்கு  தகவல் கிடைத்துள்ளது. 

இதன் அடிப்படையில்,   அவர்கள் கொள்ளையடித்த 37 ஆப்பிள் ஐபோன் ரக தொலைபேசிகள், 44 ஸ்மார்ட் ரக தொலைபேசிகள், 5 மடிக்கணினிகள், 2 டேப் கணினிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.