இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட வெளிநாட்டில் கைதான பாதாள உலக குழு

 வெளிநாட்டில் கைதான பாதாள உலக குழு உறுப்பினர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

மடகஸ்கரில் வைத்து நதுன் சின்தக்க எனப்படும் ஹரக் கட்டா மற்றும் சலிந்து மல்சிக்க எனப்படும் குடு சலிந்து ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட வெளிநாட்டில் கைதான பாதாள உலக குழு | Harak Kata Kudu Salindu Arrest

இன்றைய தினம் அதிகாலை இவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை கைது செய்வதற்காக இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அண்மையில் மடகஸ்கருக்கு சென்றிருந்தனர்.

ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்துவுடன் மேலும் ஆறு பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் ஒரு வெளிநாட்டு பெண்ணும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் இந்த சந்தேக நபர்களுக்கு தொடர்பு உண்டு எனத் தெரிவிக்கப்படுகின்றது. 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.