உள்ளூராட்சி நிறுவனங்களின் புதிய பதவிக் காலம் குறித்து வெளியான தகவல்!

 உள்ளூராட்சி நிறுவனங்களின் புதிய பதவிக் காலத்தை அறிவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு மற்றும் அமைச்சக அதிகாரிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தைக்குப் பிறகு புதிய பதவிக்காலம் அறிவிக்கப்படும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

மேலும், உள்ளூராட்சி உறுப்பினர்கள் பயன்படுத்தும் அனைத்து பொதுச் சொத்துகளும் மார்ச் 19ஆம் திகதிக்கு முன்னர் அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி நிறுவனங்களின் புதிய பதவிக் காலம் குறித்து வெளியான தகவல்! | To Announce The New Tenure Of Local Government

உள்ளூராட்சி நிறுவனங்கள்

இது குறித்து இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர கூறியதாவது, உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் மார்ச் 19ஆம் திகதி நள்ளிரவு முதல் நிறுத்தப்படும். அத்துடன், நிர்வாகம் நகர ஆணையாளர்கள் மற்றும் பிரதேச சபை செயலாளர்களின் கீழ் வரும் எனவும் வக்கும்புர தெரிவித்துள்ளார்.

மார்ச் 19ஆம் திகதிக்குப் பின்னர் உள்ளூராட்சி நிறுவனங்களால் சீர்திருத்த நடவடிக்கைகளை மாத்திரமே மேற்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.