கண்ணீர்ப்புகை குண்டுகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

 இலங்கை பொலிஸ் சேவைக்கு கண்ணீர்ப்புகை குண்டுகளைக் கொள்வனவு செய்தபோது, அவற்றின் உள்ளடக்கம் தொடர்பில் இரசாயன ஆய்வுக்கூட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 

கண்ணீர்ப்புகை குண்டுகள் தொடர்பில் சமூகம் மற்றும் அமைதிக்கான மையத்தின் குழுவொன்று மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

கண்ணீர்ப்புகை குண்டுகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் | Sri Lanka Using Expired Tear Gas On Protests

ஆய்வின்படி, 2022 ஆம் ஆண்டில் ஆர்ப்பாட்டங்களைக் கலைக்க காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றில் 2000 ஆம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்ட கண்ணீர்ப்புகை குண்டுகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2012 முதல் 2019 வரையான காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கொண்டுவரப்பட்ட 40,000 கண்ணீர்ப்புகைக் குண்டுகள் காலாவதியானவை என்பதுடன், 2022 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி வரை 8 ,265 கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கண்ணீர்ப்புகை குண்டுகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் | Sri Lanka Using Expired Tear Gas On Protests

துப்பாக்கிகளுக்கு அருகில் கண்ணீர்ப்புகையை பயன்படுத்தக்கூடாது என கண்ணீர்ப்புகை குண்டு தயாரிப்பாளர்கள் அறிவுறுத்தியுள்ள போதிலும், 2022 ஆம் ஆண்டில் துப்பாக்கிக்கு அருகிலேயே அதிகளவான கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆய்வுக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடுமையான நிதி நெருக்கடி காணப்பட்ட 2022 மார்ச் 31 முதல் ஜூலை 20 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பொலிஸார் 84 சந்தர்ப்பங்களில் 6 ,722 கண்ணீர்ப்புகை குண்டுகளை பயன்படுத்தியுள்ளதுடன், அதன் பெறுமதி 26 மில்லியன் ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கண்ணீர்ப்புகை குண்டுகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் | Sri Lanka Using Expired Tear Gas On Protests

2012ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை 4 சந்தர்ப்பங்களில் கண்ணீர்ப்புகை குண்டுகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. 2022ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட கண்ணீர்ப்புகையில் 105 கிராம் இராசாயணம் கலக்கப்பட்டுள்ளது.

அதிக புகையினை கொண்ட கண்ணீர்ப்புகையே கடந்த காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கண்ணீர்ப்புகை குண்டுகளின் ஆயுட்காலம் 5 வருடங்கள் ஆகும். 2000ஆம் ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்ட கண்ணீர்ப்புகை 2005ஆம்ஆண்டு காலாவதியாகும்.

னினும் 2000ஆம்ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட கண்ணீர்ப்புகை 22 வருடங்களின் பின்னர் 2022ஆம் ஆண்டில் உபயோகிக்கப்பட்டுள்ளது என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.   


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.