வரிச்சலுகையுடன் மின்சார வாகன இறக்குமதி! நேற்று முதல் ஆரம்பமாகியுள்ள திட்டம்

 வெளிநாட்டுப் பணத்தை இலங்கைக்கு அனுப்பிய தொழிலாளர்களுக்கு வரிச் சலுகையுடன் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் திட்டம் நேற்று (09.03.2023) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட குறித்த வாகனங்களை விடுவிக்கும் பணியை சுங்கத்துறை ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கூறுகையில், கடந்த வருட இறுதியில் வெளிநாட்டு பண அனுப்பல் 475 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.

வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனைகளை அதிகரிப்பதற்கு இந்த வேலைத்திட்டம் உதவியுள்ளது.

சட்டரீதியான பணவனுப்பல்கள்

இலங்கையில் சட்டரீதியாக வெளிநாட்டு தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தின் அடிப்படையில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இவ்வாறு டொலர்களை சட்டரீதியாக இலங்கைக்கு அனுப்பும் வெளிநாட்டு தொழிலாளரொருவர், இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணத்தில் பாதிக்கு சமமான CFI மதிப்புடைய மின்சார வாகனங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

வரிச்சலுகையுடன் மின்சார வாகன இறக்குமதி! நேற்று முதல் ஆரம்பமாகியுள்ள திட்டம் | Electric Vehicle Import To Sri Lanka

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு செலுத்த வேண்டிய வரியை வெளிநாட்டு நாணயத்தில் செலுத்த வேண்டும். இந்த வேலைத்திட்டத்திற்கு வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து சாதகமான பதில்கள் கிடைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.