சூடானில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க இந்தியா ஆதரவு
வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியின் சட்டத்தரணி அலி சப்ரி, இந்திய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும், அடுத்த சில நாட்களில் சூடானில் இருந்து இலங்கையர்களை திரும்பப் பெறுவதாக நம்புவதாகவும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சூடானில் உள்ள இலங்கையர்களின் நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகளுக்கு இந்தியா அளித்து வரும் ஆதரவை தாம் பாராட்டுவதாகவும், அடுத்த சில நாட்களில் அதை வெற்றிகரமாகச் செய்ய முடியும் என்று நம்பிக்கை இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment