அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க போகும் சம்பிக்க ரணவக்க


 அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சாத்தியம் இருப்பதாக முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாட்டை ஆளத் தகுதியற்றவர் என யாராவது கருதுகிறார்களா எனவும் சம்பிக்க ரணவக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

பொதுமக்கள்  தீர்மானிப்பார்கள்

‘‘ஜனாதிபதியாக யார் சிறந்தவர் என்பதை பொதுமக்கள் இறுதியில் தீர்மானிப்பார்கள். குடும்ப ஆட்சியையோ அல்லது பெற்றோர்கள் செய்தவற்றின் மீது சவாரி செய்வதையோ ஆதரிக்க மாட்டேன்.

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் வெறுமனே விளையாட்டில் சிறந்து விளங்குபவர் அல்லது ஒரு சிறந்த இராணுவத் தலைவராக இருக்கக்கூடாது.

மாறாக, அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் நாட்டை சிறப்பாக நிர்வகிக்கக் கூடிய ஒருவராக இருக்க வேண்டும்‘‘ என தெரிவித்துள்ளார். 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.