மூன்று நாட்களில் 700 டெங்கு நோயாளர்கள்


 இந்த வருடத்தின் கடந்த 4 மாதங்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 30,000ஐ தாண்டியுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

அவர்களில் 50 வீதமானவர்கள் மேல் மாகாணத்தின் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து பதிவாகியுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த இலங்கை மருத்துவ சங்கத்தின் உதவி செயலாளர் டாக்டர் லஹிரு கொடித்துவக்கு.

மே மாதத்தின் முதல் சில நாட்களில் மட்டும் நாடளாவிய ரீதியில் சுமார் 700 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். தற்போது கம்பஹா மாவட்டம் டெங்கு நோயினால் அதிகம் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர களுத்துறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் டெங்கு அபாய நிலை காணப்படுகின்றது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.