இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சி: வெளியான காரணம்

 இலங்கையின்ஆடை ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சி குறித்து ரோய்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இன்றைய தினம் (04.05.2023) வெளியிடப்பட்டுள்ள செய்தியிலேயே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தவருடம், இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம்ஒரு பில்லியன் அமெரிக்க டொலரால் வீழ்ச்சியடையக்கூடும் என இலங்கையின் உயர் மட்ட தொழில் நிபுணர் ஒருவரை மேற்கோள் காட்டி அந்த செய்தி கூறியுள்ளது.



ஆடை தொழில்துறை

அத்துடன், சர்வதேசத்தில் தேவை குறைவடைந்துள்ளதால், தெற்காசிய நாடுகளுக்கு நெருக்கடி ஏற்படுத்தியுள்ளது. ஆடை, இலங்கையின் மிகப்பெரிய தொழில்துறையில் ஒன்றாக உள்ளது.

கடந்த வருடம் ஆடை ஏற்றுமதி மூலம் 5.95 பில்லியன் டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகவும் ரோய்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், 2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் ஆடை தொழில்துறையின் செயல்திறன் மற்றும் ஆடை ஏற்றுமதிகள் 13.8 சதவீதம் குறைந்து 1.3 பில்லியன் அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.