யாழில் மற்றுமொரு காணிக்கு பிக்குகளால் சிக்கல்: இன்று போராட்டத்துக்கு அழைப்பு

 யாழ்.கந்தரோடையில் தனியார் காணியைக் கொள்வனவு செய்துள்ள பிக்கு அதில் விகாரை அமைப்பதற்கு எடுத்துவரும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இன்றைய தினம் (07.05.2023) முன்னெடுக்கப்படவுள்ள இப்போராட்டத்துக்குத் தமிழ்த் தேசியப் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், "கந்தரோடையின் வரலாற்றைச் சிங்கள - பௌத்த வரலாறாகத் திரிபுபடுத்தும் நோக்குடன் திட்டமிட்ட விகாரை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.



சிங்கள - பௌத்த பேரினாவாத அரசின் பூரண அனுசரணையுடன் தமிழ்த் தேசத்தின் இருப்பை அழித்து வரலாற்றைத் திரிபுபடுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் கட்டமைக்கப்பட்ட மரபுரிமைசார் இனவழிப்பு செயற்பாட்டுக்கு எதிராகக் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது.

தமிழர் வாழ்வுரிமை மையம் மற்றும் கந்தரோடை சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களுடன் இணைந்து இன்றைய தினம் (07.05.2023)  காலை 10 மணிக்கு கந்தரோடையில் முன்னெடுக்கும் தமிழ்த் தேசியப் பேரவை முன்னெடுக்கும் இப்போராட்டத்துக்குத் தமிழ்த் தேசிய உணர்வாளர்களைக் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம் " எனக் கூறியுள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.