யாழில் புதிய விகாரை! கண்டன போராட்டத்திற்கு தயாராகும் மக்கள்

 யாழ்.வலிகாமம் வடக்கு,தையிட்டி சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட பௌத்த விகாரையைச் சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்று கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வலி.வடக்கு தையிட்டி பிரதேசத்தில் இதுவரை காலமும் விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்களின் காணிக்குள் அமைக்கப்பட்டு வருகின்ற பௌத்த விகாரைக்கு மேலதிகமாக அதனை சுற்றியுள்ள பொதுமக்களின் காணிகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.



கண்டன போராட்டம்

இதனை எதிர்க்கும் முகமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சார்பாக பலரும் ஒன்றிணைந்து இந்த கண்டனப் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளனர்.

இதற்கமைய இன்று பிற்பகல் 3 மணிக்கு தையிட்டியில் இந்த போராட்டம் நடைபெறவுள்ளது.

இதில் அனைவரும் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.