அரசாங்கத்தின் மீது பாரிய மென்பொருள் தாக்குதல்

 2023 மே 17 முதல் ஆகஸ்ட் 26 வரை, அமைச்சரவை அலுவலகம் உட்பட, “gov.lk” மின்னஞ்சல் டொமைனைப் பயன்படுத்தும் அனைத்து அரசாங்க அலுவலகங்களும் பாரிய மென்பொருள் தாக்குதலைத் தொடர்ந்து தரவுகளை இழந்துள்ளதாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் (ICTA) உறுதிப்படுத்தியுள்ளது.



இந்த தாக்குதல் தொடர்பான வைரஸ் சுமார் 5000 மின்னஞ்சல் முகவரிகளை பாதிக்கலாம் என ICTAவின் பிரதம நிறைவேற்று அதிகாரி மகேஷ் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக, இந்த காலகட்டம் தொடர்பான தரவுகளை இழக்கும் அபாயம் உள்ளது என்கிறார்.

அமைச்சரவை அலுவலகம் இலங்கை அரசாங்க வலையமைப்பின் (LGN) நிறுவனங்களில் ஒன்றாகும்.

இது mail@gov.lk மின்னஞ்சல் டொமைனைப் பயன்படுத்துகிறது.

தாக்குதலைத் தொடர்ந்து, தினசரி ஆஃப்லைன் காப்புப்பிரதியைத் தொடங்கவும், வைரஸ் தாக்குதல்களுக்கு எதிராக வலுவான பாதுகாப்புடன் சமீபத்திய பதிப்பிற்கு பயன்பாட்டை மேம்படுத்தவும் ICTA நடவடிக்கை எடுத்து வருகிறது.

இலங்கை கணினி அவசர பதில் மன்றம் (SLCERT) தொலைந்து போன தரவுகளை மீட்பதற்காக ICTA உடன் நெருக்கமாகச் செயற்பட்டு வருவதாக மகேஷ் பெரேரா மேலும் தெரிவித்தார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.