உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழு அறிக்கையின் தகவல்களை மக்களுக்கு வழங்க முடியாது

 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள இரகசிய சாட்சி குறிப்புகள் அடங்கிய ஆவணங்களை பொதுமக்களுக்கு வழங்க முடியாது என மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.



இன்று ஆரம்பமான பாராளுமன்ற அமர்வில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன,

“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடங்கிய இரகசிய சாட்சியக் குறிப்புகள் அடங்கிய ஆவணங்களை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வெளியிடாமை மற்றும் பல்வேறு இலத்திரனியல் மற்றும் அச்சு மூலம் பொய்யான தகவல்கள் தொடர்பில் இந்த சபையில் எழுப்பப்பட்ட விடயங்கள், இந்த நாட்களில் ஊடகவியலாளர்கள் குறித்த சாட்சி குறிப்புகள் அடங்கிய ஆவணங்களை பொதுமக்களுக்கு வழங்காமை தொடர்பில் விளம்பரங்கள் இடம்பெற்று வருவதால் அது தொடர்பில் சரியான நிலைமையை இந்த கௌரவ சபைக்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.

ஜனாதிபதியின் செயலாளர் 03/03/2022, 14/03/2022 திகதியிட்ட கடிதத்தில், சம்பந்தப்பட்ட சாட்சிகளின் அடையாளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, இரகசிய சாட்சி குறிப்புகள் உள்ளிட்ட தகவல்களை பொதுமக்களுக்கு திறக்க முடியாது. பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் மேற்பார்வையின் கீழ் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் குறிப்புக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளர் 09/12/2023 கடிதத்தில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார் என்பதை இந்த கௌரவ சபைக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.