உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் செல்லாது

 உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படாமையால், வேட்புமனுவைச் சமர்ப்பித்த வேட்பாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக நேற்று(21)இடம்பெற்ற பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சு ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.



இந்த நெருக்கடிக்கு தீர்வு காண, இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்ய வேண்டும் என ஏகமனதாக ஒப்புதல் பெறப்பட்டது.

பிரதமர் மற்றும் அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவில் ஏகமனதாக உடன்பாடு எட்டப்பட்டது.

கள அலுவலர்கள் தங்களது தேர்தல் அதிகார வரம்பில் வாக்குகளை கோருவதற்கு எதிர்நோக்கும் இடையூறுகள் குறித்தும், அந்த தடைகளை நீக்க உரிய சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதற்காக, சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின்படி, திருத்தப்பட்ட சட்டமூலமொன்றை மீண்டும் திருத்தத்திற்கு முன்னர் இருந்த முறைக்கு மாற்ற வேண்டுமாயின், பாராளுமன்றத்தின் 2/3 பெரும்பான்மை அங்கீகாரம் மற்றும் வாக்கெடுப்பு தேவை என அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், சேவை அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வகையில் மாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் இடமாற்றம் மற்றும் பிராந்திய செயலாளர்களை இடமாற்றம் செய்தல் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது.

மாகாண அரச சேவை உத்தியோகத்தர்கள் உரிய முறையில் நியமிக்கப்படாமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. இதன்படி, பிராந்திய செயலாளர்கள் உட்பட அனைத்து நிர்வாக அதிகாரிகளின் இட ஒதுக்கீடும் முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். அதன்படி, அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்புரை வழங்கினார்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.