உரிமையாளரை கதற கதற கொலை செய்த காவலாளி- இலங்கையில் கொடூரம்!

 கட்டுகஸ்தோட்டை, மெனிக்கும்புர பிரதேசத்திலுள்ள மூன்று மாடி வீடொன்றில்பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி, வீட்டின் உரிமையாளரை கொலை செய்துள்ளார்.



நேற்றைய தினம் கூரிய ஆயுதத்தால் தாக்கி அவரை படுகொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது மனைவி வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாகவும் குறித்த நபர் இந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீடு புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருவதனால் வீட்டை பார்வையிடுவதற்கு குறித்த நபர் அடிக்கடி அங்கு வருவதாகவும் அந்த வீட்டின் பாதுகாப்பிற்காக காவலாளியாக சந்தேக நபர்  நியமிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கொலைக்கு பயன்படுத்திய கூரிய ஆயுதத்துடன் ஆற்றில் குதிக்க முற்பட்டுள்ளார். 

இதன் போதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.