நீதிபதி டி.சரவணராஜாவின் இராஜினாமா; விசாரணை அறிக்கைக்காக காத்திருக்கும் BASL

 முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியும் நீதவானுமான டி.சரவணராஜாவின் இராஜினாமா தொடர்பான விசாரணை அறிக்கையின் பிரதியினை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்ஸிடம் இருந்து பெறுவதற்கு காத்திருப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) தெரிவித்துள்ளது.



சரவணராஜாவின் இராஜினாமா தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தற்போது முடிவடைந்துள்ளதாக BASL தலைவர் கௌசல்ய நவரத்ன கூறியுள்ளார்.

அதன் பிரதியை எங்களிடம் சமர்ப்பிக்குமாறு பொதுப் பாதுகாப்பு  அமைச்சிடம் கோரியுள்ளோம்.

இந்த வாரத்தில் நாங்கள் அதைப் பெறுவோம் என்று நம்புகிறோம்.

அதன் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.