நீதிபதி டி.சரவணராஜாவின் இராஜினாமா; விசாரணை அறிக்கைக்காக காத்திருக்கும் BASL
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியும் நீதவானுமான டி.சரவணராஜாவின் இராஜினாமா தொடர்பான விசாரணை அறிக்கையின் பிரதியினை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்ஸிடம் இருந்து பெறுவதற்கு காத்திருப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) தெரிவித்துள்ளது.
சரவணராஜாவின் இராஜினாமா தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தற்போது முடிவடைந்துள்ளதாக BASL தலைவர் கௌசல்ய நவரத்ன கூறியுள்ளார்.
அதன் பிரதியை எங்களிடம் சமர்ப்பிக்குமாறு பொதுப் பாதுகாப்பு அமைச்சிடம் கோரியுள்ளோம்.
இந்த வாரத்தில் நாங்கள் அதைப் பெறுவோம் என்று நம்புகிறோம்.
அதன் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
Post a Comment