வவுனியாவில் தம்பதிகள் வெட்டிக்கொலை

 வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வயதான கணவனும், மனைவியும் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.




குறித்த சம்பவம் செட்டிகுளம் நகரப்பகுதியில் இன்று (30) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த பசுபதிவர்ணகுலசிங்கம் (வயது 72) என்ற முதியவரும், அவரது மனைவியான கனகலட்சுமி (வயது 68)என்பவருமே உயிரிழந்துள்ளனர்.

அவர்களது சடலத்துக்கு அருகில் கூறிய ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த சம்பவத்தில் 5 பவுண் பெறுமதியான தங்க நகை ஒன்றும் காணாமல் போயுள்ளதாக தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.