சம்பிக்கவுக்கு எதிரான வழக்கிற்கு இடைக்கால தடை
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான வாகன விபத்து தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.
பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்றை விசாரிப்பதற்கு அனுமதியளித்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை இந்த இடைக்கால உத்தரவு அமலில் இருக்கும் என நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சமத் மொராயஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு ராஜகிரியவில் சம்பிக்க ரணவக்க பயணித்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஒருவர் உயிர் இழந்ததாக கூறப்படும் விபத்து சம்பவம் தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment