சித்தங்கேணி இளைஞன் கொலை; நான்கு பொலிஸார் கைது
யாழ்ப்பாணம், சித்தங்கேணி இளைஞன் பொலிஸாரால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் கைது செய்யப்பட்டு , சித்திரவதைக்கு உள்ளான நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
இது தொடர்பிலான வழக்கு விசாரணை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாரை உடன் கைது செய்து நீதி மன்றில் ஆஜர்படுத்துமாறு நீதிவான் உத்தரவு பிற்பித்திருந்தார்.
அந்த உத்தரவுக்கு அமைவாக இந்த கைது இடம்பெற்றுள்ளது.
Post a Comment