இலங்கையில் அறிமுகமாகும் முதலாவது கேபிள் கார்: சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்

 இலங்கையின் மத்திய மலைநாட்டில் முதலாவது கேபிள் கார் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.



4.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திட்டத்திற்காக முதலீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த தகவலை இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.

சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், மத்திய மலைநாட்டில் அமைந்துள்ள பல்லுயிர் பெருக்க வளாகம் மற்றும் இலங்கையின் முதலாவது பல மத சங்கம இடமாக விளங்கும் அம்புலுவாவவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

கேபிள் காரானது சீனாவின் சர்வதேச கட்டட இயந்திர கூட்டுத் தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு நிபுணத்துவத்தினைப் பயன்படுத்தி நிர்மாணிக்கப்படவுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.

மேலும், இந்தத் திட்டத்திற்காக சுமார் 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.