காய்ச்சல், இருமல் இருந்தால் பாடசாலைக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல்!
தற்போதைய நாட்களில் நாட்டின் பல பாகங்களிலும் காய்ச்சல் மற்றும் சளியுடன் கூடிய சுவாச நோய் பதிவாகி வருகிறது. காய்ச்சல், இருமல் மற்றும் சளி காணப்பட்டால், பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பாடசாலை, பாலர் பாடசாலை அல்லது பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு சுகாதாரத் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
தற்போதைய நாட்களில் நாட்டின் பல பாகங்களிலும் காய்ச்சல் மற்றும் சளியுடன் கூடிய சுவாச நோய் பதிவாகி வருகிறது.
இது கொவிட்-19 மற்றும் இன்புளுவன்சா உள்ளிட்ட வைரஸ்களின் கலவையாக இருக்கலாம் என்று ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பாளரும் பேராசிரியருமான சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
Post a Comment