இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்ததில் 11 பேர் பலி
இந்தோனேஷியாவில் ‘மெராபி ‘ எரிமலை வெடித்ததில் குறைந்தது 11 மலை ஏறுபவர்கள் உயிரிந்ததுடன், 12 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க தேடல் பணிகள் இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேற்கு சுமத்ராவில் உள்ள உலகின் மிகவும் செயல்திறன் கொண்ட எரிமலைகளில் ஒன்றான மெராபி உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (03) பிற்பகல் 2.54 மணியளவில் வெடித்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எரிமலை வெடித்த போது அப்பகுதியில் 75 மலையேறுபவர்கள் இருந்தனர், எனினும் பெரும்பாலானவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
திங்கட்கிழமை (04) 3 பேர் மீட்கப்பட்டனர், காணால் போனவர்களை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment