தெல்லிப்பளை தாக்குதல் சம்பவம்: யாழ். பிரதி பொலிஸ் மா அதிபரின் கடுமையான எச்சரிக்கை

 பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது பொலிஸாரின் கடமை எனவே பொதுமக்களுக்கு பங்கம் விளைவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார்கள் என யாழ். பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார்.



அத்துடன், யாழ்.மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸார் பூரண ஒத்துழைப்பினை வழங்குவார்கள் என பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

தெல்லிப்பளையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்படுகின்றார்கள்.

தெல்லிப்பளையில் நேற்று முன்தினம் (05) இடம்பெற்ற சம்பவம் போல யாழ்ப்பாண மாவட்டத்தில் இனியும் இடம்பெற அனுமதிக்க முடியாது.

எனினும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை 48 மணி நேரத்திற்குள் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் ஏனைய பொலிஸ் பிரிவினர் இணைந்து சந்தேக நபர்களையும் சம்பந்தப்பட்ட வாகனத்தினையும் கைது செய்துள்ளார்கள்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என கருதப்படுவோர் பொலிஸாரால் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றார்கள்.

சில குழுவினரிடையே இருந்துவரும் பகைமையின் காரணமாகவே தற்போதைய வன்முறை சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது.

குறிப்பாக தெல்லிப்பளை சம்பவம் கூட ஏற்கனவே இரு குழுக்களுக்கிடேயே உள்ள முரண்பாட்டிற்கு பழி தீர்க்கும் முகமாகவே அந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.