இலங்கையில் வேகமாக அதிகரிக்கும் தேய்காயின் விலை - நெருக்கடியில் மக்கள்

 இலங்கையில் அண்மைய நாட்களில் தேங்காய் விலை வேகமாக உயர்ந்துள்ளமை மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் விடயமாக மாறியயுள்ளது.

இந்நிலையில் கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் தேங்காய் விலை 200 ரூபாவை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் நாட்களில் 220 ரூபாயை தாண்டலாம் என சந்தை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தேங்காய்  விற்பனை

மக்களின் நுகர்விற்கு தேவையான அளவு தேங்காய் கிடைக்காததால், அதன் விலை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலைமைக்கு தீர்வாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் சதொச ஊடாக குறைந்த விலையில் தேங்காய்களை விற்பனை செய்ய தென்னை அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, அரசாங்கத்திற்கு சொந்தமான கூட்டுத்தாபனத்தின் ஊடாக 110 ரூபாவிற்கு தேங்காய் கொள்வனவு செய்யப்பட்டு சதொச ஊடாக 130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் வசந்த சமரசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.